கடந்த 24 மணிநேர முடிவில், அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து பதிவாகியுள்ளன.
அமெரிக்காவில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை நேற்று 1,314 ஆக பதிவானது.
பிரான்சில் நேற்று 1,120 மரணங்கள் நிகழ்ந்தன.
இதன்படி கடந்த 24 மணி நேரத்தில், அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன.
அத்துடன் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 76,037 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுமட்டும் 31, 160 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்.
இதற்கிடையில், ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 850 இறப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் 766 இறப்புகளும், பிரிட்டனில் 684 இறப்புக்களும், ஜெர்மனியில் 168 இறப்புகளும், நெதர்லாந்தில் 148 இறப்புகளும் ஈரானில் 134 இறப்புக்களும் பதிவாகின.
இதேவேளை, கொரோனா வைரஸ் பரவிய சீனாவில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு நேற்று 31 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் கண்டறியப்பட்டன.
இதற்கிடையில், உலகளவில் புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 1,096,684 ஆக உயர்ந்துள்ளது.
உலகளவில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 59, 128 ஆக பதிவாகியுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு, அமெரிக்கா, உலகம்